அனைவர்க்கும் அன்பு வணக்கங்கள் .
அதிக விளம்பரம் இன்றி நடத்தப்பட்ட இச் சிறுகதைப் போட்டிக்கு
அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கான படைப்புகள் குவிந்தது.
அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் எல்லாம் தொடர்ந்து வெளியிடப்பட்டது.
நாம் அளித்திருந்த தலைப்பு மற்றும் சூழல் இவைகளுக்கு பொருந்திய படைப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன.
இதில் குறை சொல்ல முடியாத வகையில் ஒவ்வொரு படைப்பும், அதனதன் பாணியில் சிறந்து விளங்கின.
இறுதியாக, தேர்வுக் குழுவினரின் பரிந்துரைப்படி, ராஜ்குமார் அவர்களது இந்தப் படைப்பு முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காதல் வயப்படும் உள்ளங்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதத்தில் சிறப்பான ஒரு படைப்பு. அவருக்கு எங்களது குழுமத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில் அவரைப் பற்றிய முழு விவரங்களும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
vasusasidaran123@yahoo.com
வாழ்த்துக்கள் திரு ராஜ்குமார்....

குறிப்பு: கூடுதல் சிறப்பாக அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் மேலும் இரு படைப்புகளுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்க உள்ளோம் என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
