நம் வாழ்வில் எவ்வளவோ நிகழ்வுகள் தினசரி நடக்கின்றன.
நினைவில் நிலைத்து நிற்பவை சில.
தொலைந்து போனவை பல.
ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வடிவில் நம்முள் ஒரு
பாதிப்பை உண்டாக்கியிருக்கும்.
இதை செய்யாமல் இருந்திருக்கலாம்,
பதிலாக அதை செய்திருக்கலாம் என்று நம் மன நிலத்தை
அவ்வப்போது உழுது கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஏராளம்.
ஒன்றிற்கும் மேற்பட்ட நிகழ்வுகளை செயல்படுத்தும்
நெருக்கடிக்கு நாம் உள்ளாகும்போது
எதை முதலில் செய்வது
, எதை இறுதியில் செய்வது,
எதற்கு முன்னுரிமை கொடுப்பது.....
இந்த குளறுபடியே நம் வாழ்வில்
எத்தனையோ எதிர்பாரா இடர்களை
எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
நம்மை முன் பந்தியில் நிற்க வைத்து விடுகின்றது.
மனதை கட்டுப்படுத்தி, ஒரு நிலைக்கு கொண்டு வந்து,
தெளிவாக சிந்தித்து செயலாற்றும் திறமை மட்டும் எல்லாவருக்கும் இறைவன் கொடுத்திருந்தால்......
இதோ இங்கு குடும்ப வாழ்வில் தினசரி தவறாமல் நிகழும் ஐந்து நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் ஒரே சமயத்தில் நடக்கின்றன.
இதில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்
என்று வரிசைப்படுத்திப்பாருங்கள்.
இதில் இருந்தே எந்த வித சந்தேகமும் இன்றி
உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
********
ஒன்று. தொலைபேசி மணி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இரண்டு. குழந்தை அழுது கொண்டிருக்கின்றது.
மூன்று. வீட்டின் முன் பக்க கதவை யாரோ தட்டுகின்றார்கள் அல்லது உங்களை அழைக்கின்றார்கள்.
நான்கு. துணிகளை உலர்த்துவதற்காக கொடியில் இடும்போது மழை கொட்டத் துவங்குகிறது.
ஐந்து. திறந்து வைத்து அடைக்க மறந்த அடுக்களைக் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக கொட்டிக்கொண்டிருக்கின்றது.
இதில் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுத்து
ஐந்து நிகழ்வுகளையும் செய்து முடிப்பீர்கள்.
ஆலோசனை செய்ய நேரமில்லை.
ஒரு காகிதத்தை எடுத்து எண்களை மட்டும் வரிசைப்படி குறித்துக்கொள்ளுங்கள்.
இப்போது தெரிந்து விடும், நீங்கள் எப்படிப்பட்டவர்,
எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கும் மனம் படைத்தவர் என்பது.
நீங்கள் குறித்து வைத்த எண்களுடன் கீழே உள்ளவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் இப்படிப்பட்டவர்தான். இந்த வரிசைப்படி வாழ்வில்
நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்தான்.
இதில் எந்த வித சந்தேகமும் இல்லை... இல்லை.... இல்லை...
ஒன்று. வேலை
இரண்டு. குடும்பம்
மூன்று. நண்பர்கள்
நான்கு. பணம்
ஐந்து. அன்பு வாழ்க்கை
(இவ்வளவு நாளும் மொக்கை பதிவு போட்ட பாவம் இந்த ஒரு பதிவு மூலம் சூரியன் கண்ட பனித்துளிபோல் காணாமல் போகும் என்ற நம்பிக்கையில்.......)
ராட் மாதவானந்தா......
நினைவில் நிலைத்து நிற்பவை சில.
தொலைந்து போனவை பல.
ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வடிவில் நம்முள் ஒரு
பாதிப்பை உண்டாக்கியிருக்கும்.
இதை செய்யாமல் இருந்திருக்கலாம்,
பதிலாக அதை செய்திருக்கலாம் என்று நம் மன நிலத்தை
அவ்வப்போது உழுது கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஏராளம்.
ஒன்றிற்கும் மேற்பட்ட நிகழ்வுகளை செயல்படுத்தும்
நெருக்கடிக்கு நாம் உள்ளாகும்போது
எதை முதலில் செய்வது
, எதை இறுதியில் செய்வது,
எதற்கு முன்னுரிமை கொடுப்பது.....
இந்த குளறுபடியே நம் வாழ்வில்
எத்தனையோ எதிர்பாரா இடர்களை
எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
நம்மை முன் பந்தியில் நிற்க வைத்து விடுகின்றது.
மனதை கட்டுப்படுத்தி, ஒரு நிலைக்கு கொண்டு வந்து,
தெளிவாக சிந்தித்து செயலாற்றும் திறமை மட்டும் எல்லாவருக்கும் இறைவன் கொடுத்திருந்தால்......
இதோ இங்கு குடும்ப வாழ்வில் தினசரி தவறாமல் நிகழும் ஐந்து நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவை எல்லாம் ஒரே சமயத்தில் நடக்கின்றன.
இதில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்
என்று வரிசைப்படுத்திப்பாருங்கள்.
இதில் இருந்தே எந்த வித சந்தேகமும் இன்றி
உங்களைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
********
ஒன்று. தொலைபேசி மணி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இரண்டு. குழந்தை அழுது கொண்டிருக்கின்றது.
மூன்று. வீட்டின் முன் பக்க கதவை யாரோ தட்டுகின்றார்கள் அல்லது உங்களை அழைக்கின்றார்கள்.
நான்கு. துணிகளை உலர்த்துவதற்காக கொடியில் இடும்போது மழை கொட்டத் துவங்குகிறது.
ஐந்து. திறந்து வைத்து அடைக்க மறந்த அடுக்களைக் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக கொட்டிக்கொண்டிருக்கின்றது.
இதில் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுத்து
ஐந்து நிகழ்வுகளையும் செய்து முடிப்பீர்கள்.
ஆலோசனை செய்ய நேரமில்லை.
ஒரு காகிதத்தை எடுத்து எண்களை மட்டும் வரிசைப்படி குறித்துக்கொள்ளுங்கள்.
இப்போது தெரிந்து விடும், நீங்கள் எப்படிப்பட்டவர்,
எதற்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கும் மனம் படைத்தவர் என்பது.
நீங்கள் குறித்து வைத்த எண்களுடன் கீழே உள்ளவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் இப்படிப்பட்டவர்தான். இந்த வரிசைப்படி வாழ்வில்
நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்தான்.
இதில் எந்த வித சந்தேகமும் இல்லை... இல்லை.... இல்லை...
ஒன்று. வேலை
இரண்டு. குடும்பம்
மூன்று. நண்பர்கள்
நான்கு. பணம்
ஐந்து. அன்பு வாழ்க்கை
(இவ்வளவு நாளும் மொக்கை பதிவு போட்ட பாவம் இந்த ஒரு பதிவு மூலம் சூரியன் கண்ட பனித்துளிபோல் காணாமல் போகும் என்ற நம்பிக்கையில்.......)
ராட் மாதவானந்தா......
