
என் இனிய தமிழ் வலைப் "பெருங்குடி" மக்களே! காலை, மாலை, இரவு வணக்கம். இது ஒரு தொடர் கவிதை. தினம் தினம் மெருகு கூடிக்கொண்டே இருக்கும். ஒரு முறை பார்த்த நீங்கள் மறுமுறை வரும்போது மாற்றங்கள்
நிறைய இருக்கும்.
இது என் சொந்தப் படைப்பு. படியுங்கள்... உருகுங்கள்... அழுங்கள்....சிரியுங்கள்.... என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், தயவுசெய்து கமெண்ட் மட்டும் போட்டு என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விடாதீர்கள்......?????
தனிமையிலும்நீ எனக்கு
பிரியமானவள்,
| The moment you passed by |
| I felt a thrill!!!!! |
| When you caught my eye |
| My heart stood still!!!!! |
உனை நினைத்துஎன் விழி இமைகளும்
இதயத் துடிப்புகளும்.... ஏன்.....
கையில் கட்டிய கடிகாரமும் கூட
வேலை நிறுத்தத்தில்........
உளறுவாயன் என்றுபெயர் சூட்டப்பட்டவன் நான்???
உன்னால் இன்று
வாய் கூட
மௌன விரதம் பூண்டு
வார்த்தைகளை
திக்கி திக்கி
துப்புகிறது........
எங்கிருக்கிறாய் நீ?
காதலின் சங்கமம் காமம்என்றறிந்த பின்னும் கூட
கண்ணுக்குள் நிலவாய் நீதான் இருக்கிறாய்....
கடலில் வீழ்ந்து மீண்டவருண்டு....
காதலில் வீழ்ந்து மீண்டவருண்டோ?
உன் திருவாய் மலர்ந்துஒரு சொல் உதிர்ந்தால் போதும்.
பாலைவனத்தில் வீழ்ந்த
சிறு
பனித்துளி போல்
என் காதல் வேர்கள் உயிர் பிடிக்கும்.

(தொடரும்...)
