Showing posts with label பிரபல பதிவர். Show all posts
Showing posts with label பிரபல பதிவர். Show all posts

Sunday, November 15, 2009

நொந்து+நூலாகி+சருகாகி+உதிரும் வாழ்க்கைக் கனவுகள்......

அண்மையில் என்னுடன் ஒன்றாகப் படித்த சில பல பழைய நண்பர்களை காண நேர்ந்தது.

ஒரு புறம் சந்தோசம். மறு புறம் மெல்லிய கீறல் போல் மனதில் சிறு துக்கம்.

ஒரு வினோதம் புரியவில்லை.

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாராவது பன்னிரண்டாம் வகுப்பில் அதே போல் தேறியுள்ளதாக சரித்திரம் இருக்கிறதா?

அவர்களே மீண்டும் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற சரித்திரம் உண்டா????

சந்தர்ப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணம் பலரது வாழ்க்கையும் எதிர்பார்ப்புகளை, கனவுகளை ஓரம் கட்டி ஒதுக்கி விடுகின்றது.

நான் சந்தித்த சில நண்பர்களின் இந்நாள் நிலைமையை நேரில் கண்டபோது.......

* இன்ச் கேப்பில் பஞ்சடித்து விடும் திறமை கொண்ட ஒரு நண்பன். அபாரமாக கவிதை எழுதுவான். இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

* பத்தாயிரம் பேர் சேர்ந்து பம்பு அடித்தாலும் பொங்கும் எரிமலை நான் என்று வசனம் பேசியவன் இப்போது கலெக்டர் அலுவலகத்தில் பியூன் ஆக இருக்கிறான்.

* மனிதனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்தால் ரத்தம் எங்கே போகும் என்ற வாத்தியாரின் கேள்விக்கு 'ரத்தம் முழுவதும் மெயின் மீட்டர் பாக்ஸில் இருக்கும்' என்று சொல்லி அடி வாங்கியவன் இப்போது பிரபல வக்கீல் ஆக இருக்கிறான்.

* பத்தாம் வகுப்பில் நான் வகுப்பில் முதல் மாணவன், ஆனால் பள்ளியிலேயே முதல் மற்றும் மாவட்ட அளவில் நான்காவதாக வந்தவன், இப்போது வெஜிடேரியன் ஹோட்டல் நடத்திக்கொண்டிருக்கிறான்.

* தமிழ், ஆங்கிலம், ஒழுங்காக எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தவன், இப்போது மீட்டர் வட்டி நிறுவனம் நடத்தி பணக்காரனாக இருக்கிறான்.

* ஆறாம் வகுப்பு படிக்கும் போதே 'நானும் என் அப்பாவும் விமானத்தில் போகும்போது, என்ஜின் ரிப்பேர் ஆகிவிட, என் அப்பா என்னை துண்டால் முதுகில் கட்டிக்கொண்டு பக்கத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரே தாவாக தாவி விட்டார்' என்று ரீல் விட்டவன் இன்று மலேசியாவில் மென்பொருள் துறையில் இருக்கிறான்.

* ஆனால் வித்தியாசமாக, மிகவும் சராசரி மதிப்பெண்கள் பெற்று தேறிய சில நண்பர்கள் நிதானமாக கல்லூரிப்படிப்பை தொடர்ந்து, அதிலும் சராசரி மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நல்ல பொறுப்பில் இருக்கிறார்கள்.

* ஏழாம் வகுப்பில் டீச்சருக்கே லவ் லெட்டர் கொடுத்து டிசி வாங்கிப்போனவன் இன்று அரசியலில் புகுந்து 'மாவட்ட இளைஞர் அணி செயலாளன்.

இதில் என்னுடன் போட்டி போட்டு படித்து எனக்கு பெரும் சவாலாக இருந்தவன் இப்போது டாக்டர் ஆகி விட்டான்.

இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள். எழுத மனம் வரவில்லை.....

******************

ஆமாண்டா. இவ்வளவு தெளிவா பேசுறியே... நீ என்னத்த கிழிச்சே.....
(நீங்கள் கேட்பது காதுல கேட்காம இல்லங்க....)

******************

என்னை ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் பெற்றோருக்கு மோகம் இருந்தது. நானும் படித்தேன். ஆனால் இன்று டாக்டர் ஆகவில்லை.....
என்றாலும் அந்த அளவுக்கு ஒரு ராங்கில் இங்கு குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.

***** அதுக்கும் மேல இப்ப ஒரு ' பிரபல பதிவரா ' இருக்கேன். இதுக்கு மேல என்ன வேணுமுங்கோய்....




குறிச்சொற்கள்:
நண்பர்கள்
வாழ்க்கை
வினோதம்
வியப்பு
ஆச்சர்யம்
அபிமானம்
நட்பு
மெல்லிய துயரம்
சந்தோசம்
பிரபல பதிவர்
Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog