Sunday, December 20, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 20

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வெட்கங்கெட்டவர்கள்
கண்ணீரின் தாரை கன்னத்தில் இறங்கிக் கறையாகப் படிந்து விட்டிருந்தது.இரவெல்லாம் உறக்கம் வராமல் அழுததில் தலை பாரம் கூடிப் போயிருந்தது.இதொன்றும் புதிது இல்லை.
திருமணமான இந்த பத்து வருடங்களில் வாரம் ஒருமுறையேனும் இப்படி நடந்து கொண்டுதானிருக்கிறது.
திருமணமான புதிதில் இருந்த விட்டுக் கொடுத்தல் என்பதோ புரிந்து கொள்ளுதல் என்பதோ அடியோடு காணாமல் போய்விட்டது.

இரண்டு பேரும் முதலில் சந்தித்ததே ஒரு இரயில்பயணத்தின் போதுதான்.கணிணியில் முன்பதிவு செய்துவிட்டு ஒரு நேர்காணலுக்காக சென்னை செல்லக் கிளம்பியபோது அடையாளக் குறிப்பிற்காக வாக்களர் அட்டை,வருமான வரி அட்டையென எதுவும் எடுக்காமல் சென்று திண்டாடிப் போக, டிக்கெட் பரிசோதகரிடம் தன் மனைவி என்றும் தனித் தனியாக டிக்கெட் போட நேர்ந்து விட்டது என்றும் சமாளித்தான்.
திகைத்தவளிடம் பலமுறை மன்னிப்புக் கேட்டான்.அவனே நேர்காணலுக்கு அழைத்துச் சென்றதிலிருந்து திரும்ப ஊருக்குப் போகும்வரை பல உதவிகள்.
அவனிடமிருந்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு கைப்பேசி மூலமாக.வேலை கிடைத்ததும் துணைக்கு வரச் சொல்ல திகைப்புடன் சம்மதித்தான். இந்தமுறை வேண்டுமென்றே அடையாள அட்டையை எடுத்துப் போகவில்லை.
டிக்கெட் பரிசோதகரிடம் சென்றமுறை அவன் சொன்ன காரணத்தையே சொன்னபோது
வார்த்தைகளுக்குத் தேவையின்றி இருவருக்குமான காதல் விளங்கியது.


பலவிதங்களில் அவள் மனதைக் கவர்ந்தவந்தான் இப்போது ஒன்றுமில்லாததெற்கெல்லாம் சண்டை போட்டு அடிக்கடி அழவைக்கிறான்.

தொலைபேசியில் குமுறும் போதெல்லாம் நீதான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகனும்மா எனும் அம்மாவின் வார்த்தைகள்

தப்பே செய்யாத போதும் கூட ஏன் நான் மட்டும் அடங்கிப் போகவேனும்

இது அடங்கிப் போவது என்றில்லை.யாராவது விட்டுக் கொடுக்க வேணும் தானே

ஏன் அவர் விட்டுக் கொடுக்கட்டுமே.ஆம்பிளை என்றால் எது செய்தாலும் பொம்பளைங்க என்ன ஏதுன்னு கேட்கக் கூடாதா

பிரச்சினை என்றுமே பெரிதாக இருந்ததில்லை.

கொஞ்சம் சீக்கிரம் கிளம்பினால் என்ன?எனக்கு நேரமாகிறது

நானும் எழுந்ததிலிருந்து வேலை செய்து கொண்டுதானிருக்கிறேன்.கொஞ்சம் ஒத்தாசை பண்ணாமல் வெட்டி அதிகாரம் ஏன்?

மோட்டர் போட்டு எவ்வளவு நேரமாச்சு .பார் தண்ணீர் வழிகிறது நிறுத்தித் தொலையேன்;

என்னைக் குறை சொல்லும் நேரத்தில் நீங்க நிறுத்துங்களேன்;

அதை எங்கே வைத்தாய் தேடிக் கொடு;நீங்களே தேடினாலும் கிடைக்கும் தேடுங்க;

பையன் ஸ்கூலில் பேரண்ட்ஸ் மீட்டிங் போயிட்டு வந்துவிடு;

ஏன் நீங்களும் அவனுக்கு அப்பா தானே போயிட்டு வாங்களேன்;

எவ்வளவு நேரமாக மணியடிக்கிறது அந்த ஃபோனை எடேன்;

பேப்பர் படிப்பதை விட்டு நீங்க வரமுடியாது ஆனால் நான் மட்டும் இருக்கிற வேலையைப் போட்டுட்டு ஓடி வரனும்.எனக்கு மட்டும் என்ன நாலு கையா?

திட்டமிட்டு எதுவும் நிகழ்வதில்லை என்றாலும் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் அப்படியே குரல் உயர்ந்து சண்டையாக மாறும்போது யார் முதலில் தணிந்து போவது என்பதில்தான் சிக்கல்.கொஞ்ச நாளுக்குப் பேச்சு வர்த்தை ஏதுமின்றி அமைதியாக எல்லாம் இயந்திர கதியில் நடக்கும்.சரியாகவும் நடந்து விடும்.இது ஏன் பேசும்போது மட்டும் சாத்தியப்படுவதில்லை என்பது புரியாத புதிராகத் தொன்றும்.

ஆரம்ப நாட்களில் எவ்வளவோ விட்டுப் பிடித்தாலும் இதுவே வாடிக்கையான பிறகு மனம் வெறுத்துப் போகிறது.நேரிடையாக கண்ணீர் சிந்தவும் சுய பச்சாதாபம் இடம் கொடுக்காததால் இரவின் நீண்ட தனிமையில் துக்கம் வடிகிறது.

எம் புருசன் குடிச்சிட்டு வந்து நல்லா உதைக்கும்மா.இருந்தாலும் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டுதான் குடும்பம் நடத்துகிறேன்.புள்ளைங்களை கரை சேர்க்கனுமே அனுசரிச்சுப் போகனும் தாயீ என்பாள் வேலைக்காரம்மா

நீ பத்தாம்பசலி படிக்காதவள்.நான் அப்படியில்லை.என்னால் என் காலில் நிற்க முடியும்.யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை

எல்லார் வீட்டிலும் இப்படித்தான்.நானும் இப்பெடியெல்லாம் இருந்துவிட்டு இப்போதெல்லாம் சண்டை வந்தால் வாயே திறப்பதில்லை.பதிலுக்குப் பதில் பேசினால்தான் பிரச்சினையே என்பாள் தோழி

எல்லோருமே ஏன் பெண்கள் மட்டும் அனுசரிச்சுத்தான் போக வேண்டும் என நினைக்கிறார்கள்.இந்த புத்திமதியை யாரேனும் ஆண்களுக்குச் சொல்ல மாட்டார்களா?ஆணோ பெண்ணோ தப்பு செஞ்சவங்கதான் அனுசரிக்கனும்.இப்படியே அடங்கிப் போவதால்தான் ஆண்கள் இன்னும் கர்வத்தோடு நடக்கிறார்கள்.இந்தமுறை என் கோபம் உச்சத்தில் இருந்தது.எத்தனை மாதமானாலும் நானாகப் பேசப் போவதில்லை.அவரால்தானே பிரச்சினை ஆரம்பித்தது அவராகவே பேசட்டும்.

மாலை வீட்டுக்கு வந்தவரின் முகம் சோர்ந்து போயிருந்தது. ஒன்றும் பேசாமல் படுத்துக் கொண்டவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.இதே போன்ற சந்தர்ப்பத்தில் தலைவலி காய்ச்சல்னு படுத்தா டாக்டரிடம் காட்ட வேண்டியதுதானே.சண்டை போட வாய் நீளுது இது தெரியாதா எனக் கடுமையான வார்த்தைகள் வெடிக்கும்.மகன் மூலம் தூது வரும்.

பார்த்துக் கொண்டிருக்க மனசு கேட்கவில்லை.என்னங்க செய்யுது தலை வலிக்கிறதா என நெற்றியில் கை வைத்துப் பார்க்க,உடம்பு சூடு இல்லை காய்ச்சல் இல்லை.

இந்தாங்க இந்த காபியைக் குடித்து விட்டுப் பேசாம படுங்க.அலுவலக வேலையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம்.நன்றாகப் படுத்து ஓய்வெடுங்க அதட்டலாக சொன்னபடி தைலம் தடவி போர்வையைப் போர்த்தி விடும்வரை என் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டவர் மௌனமாக என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இந்த சண்டை இத்தோடு முடிந்து போகாது.மீண்டும் ஒரு தருணத்தில் நீயா நானா என ஆரம்பிக்கலாம்.பல நாட்கள் பேசாமலும் இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் முடிவு மட்டும் இப்படித்தான் இருக்கும்.

சிரிப்புத்தான் வந்தது.
யாருக்கு வெட்கமில்லை?
http://kouthami.blogspot.com/2009/12/blog-post_8031.html

2 அன்பு உள்ளங்கள்....:

திருவாரூர் சரவணா said...

நிறைய குடும்பங்களில் உள்ள புரிந்துகொள்ளாமையால் வரும் துன்பங்களைப் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். ஆனால் இந்தப் பரிசுப்போட்டிக்கு உள்ள குறிப்புகளான சிறு பேருந்து அல்லது ரயில் பயணம் இல்லையே?

சுரபி said...

:))))))))))))
nice......

@saran
Green colorla nenga ketta situation irukku....

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog