Thursday, March 12, 2009

தேனிசை.... இதுதான்...........அ, ஆ.......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
'அ' , 'ஆ' வில் துவங்கும் அருமையான பழைய திரை கீதங்கள்.

மகாராசன் 'கார்த்திக்கின்' விருப்பத்திற்கிணங்க ஓராயிரம் வேலைப்பளுவிற்கு இடையிலும் 'அதிரடியாக' இந்தப்பாடல்களும் சேர்க்கப்படுகின்றன.

1963
பெரிய இடத்துப்பெண் டி எம் எஸ், பி சுசீலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ... ஆ....
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா....
---
அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
-----
காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜுலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
-----
நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்த நிலா
பாதி தேய்ந்து வெள்ளி நிலா




1959
அமுதவல்லி திரைப்படத்தில்
டி ஆர் மகாலிங்கம், பி சுசீலா பாடியது

-----

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
-----
துள்ளி துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளைதான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலந்தானந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
-----
அந்தி வெயில் நிறத்தவளோ
குலுங்கும் அள்ளி மலர் இனத்தவளோ

உந்தி உந்தி விழும் நிலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

-----


1960
ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்
டி எம் சௌந்தரராஜன் பாடியது



ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டளை ஆறு

-----

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

எல்லா நன்மையும் உண்டாகும்.

-----

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

-----

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்

உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

-----

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டளை ஆறு



1960

மன்னாதி மன்னன் திரைப்படத்தில்

டி எம் சௌந்தரராஜன் பாடியது


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
-----
கனக விசயரின் முடி தலை தெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன் கோடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
-----
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
-----
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
-----
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா


1957

தங்கமலை ரகசியம் திரைப்படத்தில்

பி சுசீலா பாடியது
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
-----

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புது மலர் மேனி வாடி விடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
-----
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ...
இளமை நினைவும் இனிமை வளமும்
கனவை கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
-----
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ


1966

நாடோடி திரைப்படத்தில்

டி எம் எஸ், பி சுசீலா பாடியது


அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயோ வெண்ணிலவே

அன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே - நீ
பார்த்தாயே வெண்ணிலவே
-----
வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்

சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே - நீ
சாட்சியடி வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயோ வெண்ணிலவே

-----
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயோ வெண்ணிலவே

13 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

\\epiy caUk; NghJ gzpT nfhz;lhy; capu;fs; cd;id tzq;Fk;

cz;ikiar; nrhy;yp ed;ikiar; nra;jhy; cyfk; cd;dplk; kaq;Fk;

epiy caUk; NghJ gzpT nfhz;lhy; capu;fs; cd;id tzq;Fk;

cz;ik vd;gJ md;ghFk; ngUk; gzpT vd;gJ gz;ghFk;

cz;ik vd;gJ md;ghFk; ngUk; gzpT \\

ஒன்னுமே புரியலையே

உங்கள் ராட் மாதவ் said...

thalaiva unga kitta font illennu ninaikkiren. tt la oru nalla tamil font pottu paarunga

நட்புடன் ஜமால் said...

\\thalaiva unga kitta font illennu ninaikkiren. tt la oru nalla tamil font pottu paarunga\\

which font you are using.

why don't use unicode

Try this

தமிழ் தட்டச்சு

உங்கள் ராட் மாதவ் said...

jamal anna, thanks for your timely help. Now updated. Thanks.

Anonymous said...

Enna padhivu idhu!!!

Ammaa gomma ammma hey gomma

aata aatorma vaariya

ahhhhhhhhhh sssssss aaaaaaaaaa sssssaaaaaaa

Idhu maadhiri gilma paathu poda sonna palaiya paathu


idhai kandithu naanum, engal GILMAA-MATTER MUNNETRA KALAGAM (GMMK) podhu seyalaalar Lanceum velinadappu seikiroom!!!

உங்கள் ராட் மாதவ் said...

@Karthik, thampi 'Old is always gold'
puthusu 3 naalaikku thaan nikkum. aanaa palasu 300 varusam kooda thaakku pidikkum, therinjukkoppa.

Anonymous said...

naa ketha palaya paathu


avalukenna alagiya mugam (idhu yaar solrenu kandupidinga!! nambha frndu thaan)


andru vandadhuma dhe nila


adhoo anda paravai pola vaaza vendhum


neevir sonna paathula kethen.. aana paatyhadilla...

உங்கள் ராட் மாதவ் said...

Nadathu rasa nadaththu. yennamo vulkuthu pannanumnu plan pottututta.
nalla iru raasa nalla iru.

ஹேமா said...

ஓராயிரம் வேலைகள் நடுவிலேயும் அற்புதாமான பாடல்கள்.நன்றி மாதவ்.எனக்கு "அன்று வந்ததும்ம் இதே நிலா..""ஆடை கட்டி வந்த நிலவோ...""அன்றொருநாள் இதே நிலவில்..."நிறையப் பிடித்தமான பாடல்கள்.

ஹேமா said...

இன்னொருமுறை சொல்ல நினைக்கிறேன்.

மாதவ்,முடிந்தவரை தமிழில் பின்னூட்டங்கள் தர முயற்சி செய்யுங்களேன்.நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை எல்லோருமே கவனிக்கவும் மனதில் பதிய விடவும் முடியும்.ஆங்கிலத்தில் எழுதியிருக்கையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுக் கவனிக்காமலே போகிறது.

உங்களினதும் வாசவனின் பக்ககமும் ஆங்கிலப் பின்னூட்டக்கள் அல்லது ஆங்கிலத்தால் எழுதப்பட்ட தமிழ் அதிகம்.இருவரையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

எங்கே வாசவன்..?

Lancelot said...

//Enna padhivu idhu!!!

Ammaa gomma ammma hey gomma

aata aatorma vaariya

ahhhhhhhhhh sssssss aaaaaaaaaa sssssaaaaaaa

Idhu maadhiri gilma paathu poda sonna palaiya paathu


idhai kandithu naanum, engal GILMAA-MATTER MUNNETRA KALAGAM (GMMK) podhu seyalaalar Lanceum velinadappu seikiroom!!! //

Repeatuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

Lancelot said...

Avalukenna alagiya mugam - dei Kartik nee yara ethukku solranu theriyum avanga ennadanaa unna divorce pannuvenu sollitiu irukkanga...

Lancelot said...

Please Check my blog - u have been awarded :0

http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/friends-interview.html

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog