Sunday, August 16, 2009

பிரபல பதிவர்களிடம் கேட்கக்கூடாத பத்து கேள்விகள்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எடக்கு மடக்காக யாராவது கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

இல்லை என்றால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்.


* உலகில் இன்று அனைத்து நாடுகளுமே பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. (அதாவது கடன் தொல்லை) சரி...... என்றால் இந்த பணம் அனைத்தும் எங்கு போனது????

** ஒலி, ஒளி இரண்டிற்கும் வேகம் உள்ளது.. என்றால் 'இருட்டின்' வேகம் எவ்வளவு????

*** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்????

**** கால்குலேட்டர், மொபைல், இரண்டிலும் எண் வரிசை ஏன் தலை கீழாக இருக்கின்றது????

***** மீன்களுக்கு என்றாவது தாகம் எடுக்குமா????

******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா????

*******எதுக்கெடுத்தாலும் 'ஓகே' 'ஓகே' னு சொல்றீங்களே.... இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா????

********தண்ணீரில் மூழ்கிக்கொண்டு உங்களால் ஒரு பலூனை ஊத முடியுமா????

********* நாய்க்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் வெளியிடும் முன் முதலில் யார் அதை ருசி பார்த்து ஓகே சொல்வது????

********** தண்ணீருக்கு அடியில் நின்று அழுதால் உங்களுக்கு கண்ணீர் வருமா வராதா?????

போனஸ் கேள்வி:

*********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்?????

படிச்சிட்டு பத்தி சொல்லத் தெரியாம டென்ஷன் ஆக வேண்டாம்.
எனக்கு மெயில் அனுப்பினால் எல்லாவற்றிற்கும் துல்லியமான தெளிவான பதில் அனுப்பி வைக்கப்படும்.


ஈமெயில் உதவி - 'நன்றி துரை மாமா'

28 அன்பு உள்ளங்கள்....:

VASAVAN said...

//******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா????//

நான்கைந்து நல்ல பதிவர்கள் சேர்ந்து சாத்து சாத்துன்னு சாத்தினால் உன்னை ஓரம் கட்ட முடியும் :-)))

VASAVAN said...

//*********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் ஆ சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்?????//

ஏதோ உள் குத்து இருக்குற மாதிரி தெரியல???? :-)

நட்புடன் ஜமால் said...

கேட்கக்கூடாத கேள்வியெல்லாம் அவங்ககிட்ட ஏன்ப்பா கேட்க்கிறே ;)

லொள்ளு சபா said...

//"* உலகில் இன்று அனைத்து நாடுகளுமே பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. (அதாவது கடன் தொல்லை) சரி...... என்றால் இந்த பணம் அனைத்தும் எங்கு போனது????"//


மார்வாடிக் கடைக்கு

லொள்ளு சபா said...

//"** ஒலி, ஒளி இரண்டிற்கும் வேகம் உள்ளது.. என்றால் 'இருட்டின்' வேகம் எவ்வளவு????"//

சாரி
இருட்டிட்டதால மிஸினுக்கு கண்ணு தெரியல

லொள்ளு சபா said...

//"** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்????"//

அதுக்கு பேருதாங்க வெட்டி வேலை

லொள்ளு சபா said...

//"********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் ஆ சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்?????"//

இந்த மாதிரியான கேள்வியெல்லாம் படிச்சிட்டு டென்ஸன் ஆகறதால

கலாட்டா அம்மணி said...

ஏன் இப்படி..நல்லாதான இருந்தீங்க...திடீர்னு என்ன ஆச்சு உங்களுக்கு?

கலையரசன் said...

மெயில்ல நிறைய பாயின்ட்ஸ் வந்துதே மாதவ்..?
தமிழாக்கம் நன்று பாஸ்..

Jazeela said...

OK was used in March 1839 as an abbreviation for all correct, the joke being that neither the O nor the K was correct. Originally spelled with periods, this term outlived most similar abbreviations owing to its use in President Martin Van Buren's 1840 campaign for reelection. Because he was born in Kinderhook, New York, Van Buren was nicknamed Old Kinderhook, and the abbreviation proved eminently suitable for political slogans. That same year, an editorial referring to the receipt of a pin with the slogan O.K. had this comment: “frightful letters … significant of the birth-place of Martin Van Buren, old Kinderhook, as also the rallying word of the Democracy of the late election, ‘all correct’ .... Those who wear them should bear in mind that it will require their most strenuous exertions … to make all things O.K.” (Source: http://www.answers.com)

தேவன் மாயம் said...

நல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை!! விடு ஜூட்...

வால்பையன் said...

உங்ககிட்ட இந்த கேள்வியெல்லாம் கேட்டது யாரு!?

ஏன்பா கேள்வி கேட்டவரே இனிமே இந்த பிரபல பதிவரிடம் இந்த கேள்விகளை கேட்காதிங்க!

ஹேமா said...

மாதவ்,வாசவன் பின்னூட்டம் பாத்துச் சிரிப்பு அடக்க முடில.

//*** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்????//

எப்பாச்சும் மிருகங்கள் மனுஷனைப் பாத்து நீ ஏன் மனுஷன் மாதிரி இருக்கேன்னு திட்டியிருக்கா?திட்டியிருந்தா மனுஷன் மிருகத்தை எல்லாத்துக்கும் இழுத்துப் பேசியிருக்க மாட்டானோ !

உங்கள் ராட் மாதவ் said...

// VASAVAN said...

//******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா????//

நான்கைந்து நல்ல பதிவர்கள் சேர்ந்து சாத்து சாத்துன்னு சாத்தினால் உன்னை ஓரம் கட்ட முடியும் :-)))//

எங்களது 'மன்னார் அண்ட் கோ' வில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு பின்னூட்டம் போட இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
(கொசுக்கடி தாங்க முடியலப்பா :-))))))))))

உங்கள் ராட் மாதவ் said...

//நட்புடன் ஜமால் said...

கேட்கக்கூடாத கேள்வியெல்லாம் அவங்ககிட்ட ஏன்ப்பா கேட்க்கிறே ;)//

அப்பா ஜமால் அண்ணாவப் பார்த்து கேட்க வேண்டியதுதான்....:-)

உங்கள் ராட் மாதவ் said...

லொள்ளு சபா வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

உங்கள் ராட் மாதவ் said...

// கலாட்டா அம்மணி said...

ஏன் இப்படி..நல்லாதான இருந்தீங்க...திடீர்னு என்ன ஆச்சு உங்களுக்கு?//

HEE HE HE HE HE..... :-)

உங்கள் ராட் மாதவ் said...

//கலையரசன் said...

மெயில்ல நிறைய பாயின்ட்ஸ் வந்துதே மாதவ்..?
தமிழாக்கம் நன்று பாஸ்..//

நன்றி KALAIYARASAN ......

உங்கள் ராட் மாதவ் said...

//Blogger ஜெஸிலா said...//

Many thanks for your valuable comments.

Also pls read the following

Okay can mean "all right" or "satisfactory". For example, "I hope the children are okay" means "I hope the children are all right"; "I think I did OK in the exam" means "I think I did well, but not perfect, on the exam"; and "He is okay" means "He is good", or "He is well", depending on context.

Depending on context and inflection, okay can also imply mediocrity. For example: "The concert was just okay."

Okay is sometimes used merely to acknowledge a question without giving an affirmation. For example: "You're going to give back the money that you stole, right?" "Okay."

Saying okay in a sarcastic tone or questioning tone can indicate that the person one is talking to is considered crazy and/or exacerbatingly stubborn in their view. "I really saw a UFO last night!" "Okay..."

Okay! can also be used as an exclamation in place of words like "enough!" or "stop!"

Okay can be a noun or verb meaning approval. "Did you get the supervisor's okay?" "The boss okayed the proposal."

உங்கள் ராட் மாதவ் said...

//தேவன் மாயம் said...

நல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை!! விடு ஜூட்...//

யாருங்க உங்கள பி. பதிவர் இல்லேன்னு சொன்னது... நாங்க விட்ருவோமா....

உங்கள் ராட் மாதவ் said...

//வால்பையன் said...

உங்ககிட்ட இந்த கேள்வியெல்லாம் கேட்டது யாரு!?

ஏன்பா கேள்வி கேட்டவரே இனிமே இந்த பிரபல பதிவரிடம் இந்த கேள்விகளை கேட்காதிங்க!//

மிக்க நன்றி அருண் அவர்களே...
என்னை பிரபல பதிவர் என்று ஒப்புக்கொண்ட முதல் மிகப் பிரபல பதிவர் நீங்கள்தான் ....

உங்கள் ராட் மாதவ் said...

//ஹேமா said...

மாதவ்,வாசவன் பின்னூட்டம் பாத்துச் சிரிப்பு அடக்க முடில.//

மிக்க நன்றி ஹேமா அவர்களே.
'''' என்னைய வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே''''
:-))

வால்பையன் said...

//மிக்க நன்றி அருண் அவர்களே...
என்னை பிரபல பதிவர் என்று ஒப்புக்கொண்ட முதல் மிகப் பிரபல பதிவர் நீங்கள்தான் ....//

உங்களை பிரபல பதிவர்ன்னு ஒத்துகிறேன்! அதுக்காக என்னை பிரபல பதிவர்ன்னு டரியல் ஆக்காதிங்க!
நான் குழந்த பையன்!

உங்கள் ராட் மாதவ் said...

// வால்பையன் said...

//மிக்க நன்றி அருண் அவர்களே...
என்னை பிரபல பதிவர் என்று ஒப்புக்கொண்ட முதல் மிகப் பிரபல பதிவர் நீங்கள்தான் ....//

உங்களை பிரபல பதிவர்ன்னு ஒத்துகிறேன்! அதுக்காக என்னை பிரபல பதிவர்ன்னு டரியல் ஆக்காதிங்க!
நான் குழந்த பையன்!//

தலைவா, உங்களது கூற்றில் இலக்கணப்பிழை இருக்கின்றது....கூடவே சந்திப்பிழையும்......
:-)

நான் உங்களை எப்போது பிரபலப் பதிவர் என்று கூறினேன்.
'மிகப் பிரபலப் பதிவர்' என்று உண்மையைத்தானே கூறினேன். :-)))

வால்பையன் said...

//நான் உங்களை எப்போது பிரபலப் பதிவர் என்று கூறினேன்.
'மிகப் பிரபலப் பதிவர்' என்று உண்மையைத்தானே கூறினேன். :-))) //

பிரபலபதிவர்=சாதா செருப்பு
மிகப்பிரபல பதிவர்=பிஞ்ச செருப்பு!


ரைட்டு அடிச்சு ஆடுங்க!

உங்கள் ராட் மாதவ் said...

// வால்பையன் said...

//நான் உங்களை எப்போது பிரபலப் பதிவர் என்று கூறினேன்.
'மிகப் பிரபலப் பதிவர்' என்று உண்மையைத்தானே கூறினேன். :-))) //

பிரபலபதிவர்=சாதா செருப்பு
மிகப்பிரபல பதிவர்=பிஞ்ச செருப்பு!


ரைட்டு அடிச்சு ஆடுங்க!//

எனக்கு இதுவும் வேணும்.... இன்னமும் வேணும்....
நடத்துங்க ராசா நடத்துங்க....:-))

கரவைக்குரல் said...

சுவாரஷ்யமான கேள்விகள்
பதிவை ரசித்தேன்

உங்கள் ராட் மாதவ் said...

//கரவைக்குரல் said...

சுவாரஷ்யமான கேள்விகள்
பதிவை ரசித்தேன்//

மிக்க நன்றி கரவைக்குரல் அவர்களே..

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog